
Hosted by tamilaudiobooks · EN

Original by Raghavan Srinivasan ராகவன் சீனிவாசன் (Author), Sridhar Trichendurai ஸ்ரீதர் திருச்செந்துறை (Translator) a proud audiobook production by aurality/ itsdiff entertainment ebook by Swasam Publications download FREE aurality app apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share தமிழக வரலாற்றில் மட்டுமின்றி தென்னிந்திய வரலாற்றிலும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் 'பொற்காலம்' என்றே கருதப்படுகிறது. ராஜராஜ சோழன் ஆட்சியில் அமர்ந்ததும், தமிழர்களின் நூற்றாண்டுப் பெருமிதத்தையும் கலையையும் மீட்டெடுத்தார். என்றென்றும் அழிக்க இயலாத ஒரு பாரம்பரியத்தை உருவாக்கினார். இன்றளவும் நாம் ராஜராஜ சோழனின் புகழைப் பேசுகிறோம் என்பதிலிருந்தே இவரது ஆட்சிச் சிறப்பைப் புரிந்துகொள்ளலாம். ராணுவம், கலைகள், மதம், இலக்கியம் என அனைத்துத் துறைகளும் இவரது ஆட்சிக் காலத்தில் சிறந்து விளங்கின. ஈழத்தின் மேல் படையெடுத்து அதையும் வென்றவர் ராஜராஜ சோழன். அருண்மொழிவர்மன் என்னும் ராஜராஜ சோழனின் வரலாற்றையும், சோழர்களின் சாதனைகளையும் ஆதாரபூர்வமாகவும் எளிமையாகவும் விரிவாகவும் சொல்லும் நூல் இது. எழுத்தாளர் ராகவன் சீனிவாசன் எழுதி ஸ்ரீதர் திருச்செந்துறை மொழிபெயர்த்து சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். a proud tamil audiobook production from Aurality/ itsdiff Entertainment

ஆறுமுகனின் வனவாசம்: download aurality app and give it a listen apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share இது வீடு விட்டு, காடு செல்லும் கதை. அமலமுனி குறிப்பிட்ட அந்த ஒரு ஆண்டில் காட்டில் நடக்கும் நிகழ்வுகளே இக்கதை... ஆறுமுகன் அதற்கு எவ்வாறு தன்னை தயாராக்கி கொண்டு, தடைகளை தவிர்த்து, காட்டில் வாழ்ந்து அமலமுனி கூறிய ஓராண்டில், ஆறுமுகன் என்ன என்ன மாற்றங்கள் பெற்று இருப்பான் என்பதை இனி வெளிவரும் பாகங்களிலேயே காணலாம்... த.ஆ.வெங்கடேஷ் முருகா ================ an aurality/ itsdiff Entertainment production

Malaiyankulam - Short story collection மலையன்குளம் (சிறுகதைத் தொகுப்பு) Malayankulam - மலையன்குளம் - Short story collection a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback how is it apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share சிறுகதைகள் எப்போதுமே மனதுக்கு நெருக்கமானவை. நம் பால்ய கால நினைவுகளைக் கிளர்த்தும் கதைகள் கூடுதல் நெருக்கமானவை. நம் நினைவுகளைக் கிளர்த்துபவை. கரைய வைப்பவை. மலையன்குளம் என்ற இந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகள் இந்த வகையைச் சேர்ந்தவை. ஜெயராமன் ரகுநாதனின் பூச்சுகளற்ற நடையில், இந்தக் கதைகளுக்குள் நாம் இயல்பாகவே நுழைந்து விடுகிறோம். இதில் வரும் கதாபாத்திரங்களை நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் ஒரு தடவையேனும் நிச்சயம் கடந்து வந்திருப்போம். இதில் வரும் நிகழ்வுகள் நம் வாழ்விலும் நடந்திருக்கும். இந்தக் கதைகளில் வரும் ‘இவன்’ நாமாகவும் இருக்கலாம். இந்தக் கதைகள் உங்களைச் சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும், நெகிழவும் வைக்கும். பல பசுமையான நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும் கால இயந்திரமாக இந்தக் கதைகள் இருக்கும். எழுத்தாளர் ஜெயராமன் ரகுநாதன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். a proud tamil audiobook production from Aurality Author: Jayaraman Raghunathan Narrator: Bhavani Anantharaman Publisher: Itsdiff Entertainment

Title: Porkai Swamigal – Sri Sheshadri Swamigal Subtitle: பொற்கை சுவாமி - ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback how is it apple store ? https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share பொற்கை சுவாமி - ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் - காற்றின் திசை காற்றின் வேகம் காற்றின் மொழி. ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ‘தங்கக் கை சுவாமிகள்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மகான். பகவான் ரமணரின் சமகாலத்தவர். சுவாமிகள் தொட்டது துலங்கும். மகா ஞானி. திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்த சந்நியாசி. அதிகம் பேசாமல், மிகக் குறைந்த வார்த்தைகளில் உலகையே ஸ்தம்பிக்கச் செய்யும் பேருண்மைகளைச் சொல்லி விடும் பித்து நிலைச் சித்தர். ஞான திருஷ்டியில் முக்காலமும் திரிபவர். அஞ்ஞானத்தை அறுத்து மெய்ஞானத்தைத் தன் சிஷ்யர்களுக்கு அளித்தவர். காஞ்சி காமாட்சியின் அவதாரம். ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் போலப் பல சித்தர்கள் எவ்வித உரைநூலோ உபதேசங்களோ வழங்காமல், தங்களது யோக சித்திகள் மூலம் வாழ்ந்து காட்டிச் சென்று விடுகிறார்கள். அவர்களது ஞானத்தின் விரிவு நூல்களாகத் தொகுக்கப்படுவதில்லை. இதுபோன்ற பிரம்மஞானிகளின் வாழ்க்கையை இதுபோன்ற சித்திரமாகத் தீட்டும்போதுதான், அவர்களைப் பற்றிய தகவல்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்த முடியும். சேஷாத்ரி சுவாமிகளைப் பற்றிப் பேசும்போது பகவான் ரமணரைப் பற்றிப் பேசாமல் இருப்பது எங்கனம்? இந்த நூல் பகவான் ரமணரைப் பற்றிய ஒரு சித்திரத்தையும் சேர்த்துத் தருவது அழகு. அதோடு, சுவாமிகளின் சமகாலத்து ஞானிகளைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன. படிப்பவர்களைக் கரைய வைக்கும் அழகுத் தமிழில் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. எழுத்தாளர் சத்தியப்பிரியன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். a proud audiobook production from Aurality Author: Sathiyapriyan Narrator: Pushpalatha Parthiban Publisher: audiobook - Itsdiff Entertainment ebook - Swasam

நன்றி - ஆராலிட்டி தரை இறக்கி வாசிக்கவும், எங்கள் ஒலிப் புத்தகத்தினை கேட்டு மகிழவும் - have you downloaded aurality app ? how is it apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share Eliya Tamilil Chola Varalaaru Subtitle: எளிய தமிழில் சோழ வரலாறு An Aurality Tamil Audio Book Production - http://aurality.app Educate, Entertain and Enhance Eliya Tamilil Chola Varalaaru (Original: Rasamanikkanar): (மூலம்: இராசமாணிக்கனார்) எழுத்தாளர் அச்யுதன் ஶ்ரீ தேவ் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் Aurality tamil audio book வழங்கும் ஒலிவடிவம் கேட்போம். இராசமாணிக்கனாரின் சோழர் வரலாறு நூல் மிகவும் முக்கியமான நூல். ஆழமான ஆய்வுடன் அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் ஆதாரத்துடன் விரிவாக எழுதி இருக்கிறார் இராசமாணிக்கனார். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள் இந்த நூலின் முதல் பதிப்பிற்குத் தந்திருக்கும் முன்னுரையே இதற்கு ஆதாரம். இராசமாணிக்கனாரின் காலத்து ஆய்வுத் தமிழில் அமைந்த நூல் இந்தக் காலத்துக்கு ஏற்ற வகையில் எளிய தமிழில் முழுமையாக மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. பொதுயுகத்துக்கு முன்பான சோழர்கள் தொடங்கி, சோழன் நலங்கிள்ளி, கிள்ளி வளவன், கோப்பெருஞ்சோழன், நெடுமுடிக்கிள்ளி என அனைத்து மன்னர்களையும் ஆராய்ந்து, எழுச்சி பெற்ற சோழர்கள் காலத்தைச் சேர்ந்த முதல் பராந்தக சோழன், முதலாம் ராஜராஜன், ராஜேந்திர சோழன் போன்ற அரசர்களின் ஆட்சியையும் அவர்களது சாதனைகளையும் விவரித்து, பின்னர் முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், இரண்டாம் ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜன், மூன்றாம் ராஜேந்திரன் வரையிலான அனைத்து சோழர்களின் வரலாறும் ஆய்வுபூர்வமாக இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது. சோழர்கள் ஆட்சியின் சிறப்பு, கொடை, கல்வெட்டுகள், நிவந்தங்கள், சோழர்கள் கட்டிய கோவில்கள், சோழர்களின் படையெடுப்புகள் என இந்த நூலில் இடம்பெறாத தகவல்களே இல்லை எனலாம். தமிழ்நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்துகொள்ள நினைக்கும் ஒவ்வொருவரின் கையிலும் இருக்கவேண்டிய அரிய நூல் இது. Author: Achyutan Shree Dev Narrator: Pushpalatha Parthiban Publisher of audiobook Itsdiff Entertainment ebook by Swasam Publications

நன்றி - ஆராலிட்டி தரை இறக்கி வாசிக்கவும், எங்கள் ஒலிப் புத்தகத்தினை கேட்டு மகிழவும் - have you downloaded aurality app ? how is it apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share Vaikom Poraattathil Brahmanargal Subtitle: வைக்கம் போராட்டத்தில் பிராமணர்கள் Series Name: Not Set Series Entry: Not Set Description: An Aurality Tamil Audio Book Production திருவாங்கூர் சமஸ்தானத்தில் தீண்டாமைக்கு எதிராக நடந்த வைக்கம் போராட்டம் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய நிகழ்வாகும். பட்டியலினத்தவர்களின் கோவில் நுழைவைச் சாத்தியமாக்கிய இப்போராட்டத்தைக் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. வைக்கம் போராட்டத்தில் பல முக்கியமான தலைவர்கள் பங்கெடுத்தனர். ஆனாலும் இப்போராட்டத்தில் பங்கெடுத்த தலைவர்கள் குறித்து விவாதம் நடந்தவண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தப் போராட்டத்தைப் பிராமணர்களுக்கு எதிராகச் சித்திரிப்பதில் சில அரசியல் சக்திகளுக்கு உள்நோக்கமும் ஆதாயமும் இருப்பது கண்கூடு. இந்தக் கேள்விகளுக்கு ஆய்வுநோக்கில் ஆதாரபூர்வமாகப் பதில் சொல்கிறது இந்தப் புத்தகம். * வைக்கம் போராட்டத்தில் பிராமணர்களின் பங்களிப்பு என்ன? * இந்தப் போராட்டத்திற்குப் பிராமணர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் இருந்தனவா? * இந்தப் போராட்ட வெற்றியில் பிராமணர்களின் பங்கு என்ன? இந்தக் கேள்விகள் குறித்து ஆசிரியர் மா.வெங்கடேசன் தெளிவாக இப்புத்தகத்தில் விளக்கியுள்ளார். மறைக்கப்பட்ட பலரது முகங்களை, தியாகங்களை ஆதாரத்தோடு பதிவு செய்கிறது இந்தப் புத்தகம். An Aurality Tamil Audio Book Production எழுத்தாளர் மா.வெங்கடேசன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் Aurality tamil audio book வழங்கும் ஒலிவடிவம் கேட்போம். Author: M. Venkatesan Narrator: Pushpalatha Parthiban audio book Publisher: Itsdiff Entertainment ebook by Swasam publications

நன்றி - ஆராலிட்டி தரை இறக்கி வாசிக்கவும், எங்கள் ஒலிப் புத்தகத்தினை கேட்டு மகிழவும் - have you downloaded aurality app ? how is it apple store https://apps.apple.com/us/app/aurality-infotainment/id1638152365 or play store in google - https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&pcampaignid=web_share Vedha Kaalam Subtitle: வேத காலம் (சுருக்கம்) Series Name: Not Set Series Entry: Not Set Description: Vedha Kaalam (Abridged) - a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback - வேத காலம் (சுருக்கம்) Download Aurality in app store , google play to support tamil digitization Rate our audio book Nandri 1. வேதங்கள் எப்போது எழுதப்பட்டன? 2. வேதங்கள் ஏன் எழுத்தில் எழுதப்படவில்லை? 3. சோமரசம் என்பது மதுபானமா? 4. வேத காலக் கல்வி அமைப்பின் சிறப்பு அம்சங்கள் யாவை? 5. வேத காலத்தில் பெண்களின் நிலை என்ன? 6. வேத காலச் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு எப்படி இருந்தது? 7. வர்ணாஸ்ரம தர்மத்தின் அடிப்படை என்ன? இவை போன்ற கேள்விகளுக்குத் தற்காலத்தில் பலவிதமான பதில்கள் பலராலும் வழங்கப்படுகின்றன. அவற்றுள் எது உண்மை என்பதை அறிவது கடினம். பெரும்பாலான பதில்கள் தவறான உள்நோக்கத்துடன் பரப்பப்படுகின்றன. வேத காலம் குறித்த கேள்விகளுக்கு உண்மையான, ஆதாரபூர்வமான விடையைத் தேடுவதே இந்த நூலின் நோக்கம். ஆயிரம் பக்கங்களுக்கு நீளும் நீண்ட புத்தகத்தின் சுருக்கப்பட்ட வடிவம் இது. எளிமையான தமிழில், அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் மொழிபெயர்த்திருக்கிறார் எழுத்தாளர் Balshastri Hardas பாளாசாஸ்த்ரி ஹரிதாஸ் எழுதி B.R. மகாதேவன் மொழிபெயர்த்து சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: B.R. Mahadevan Narrator: Pushpalatha Parthiban Publisher: of Audiobook Itsdiff Entertainment Ebook by Swasam Publications

Title: Padmanabha Padukolai listen on https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&hl=en_US Subtitle: பத்மநாபா படுகொலை Padmanabha Padukolai / பத்மநாபா படுகொலை An Aurality Tamil Audiobook Production ஆயுதமேந்திய குழுவொன்று வீடு புகுந்து பட்டப்பகலில் 14 பேரைச் சுட்டுக்கொன்ற சம்பவம், தமிழ்நாட்டிற்குப் புதிது. அதுவரை தமிழர்கள் ஏ.கே 47 துப்பாக்கியைத் திரைப்படங்களில் மட்டுமே கண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் துப்பாக்கிக் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியது பத்மநாபாவின் படுகொலை. இது சகோதர யுத்தம் மட்டுமல்ல. கள்ளத்தோணியில் வந்திறங்கி, கச்சிதமாகத் திட்டமிட்டுச் செய்யப்பட்ட படுகொலை. கோடம்பாக்கத்தின் ஜக்காரியா காலனியை ரத்தச் சகதியாக்கிவிட்டு கொலைகாரர்கள் தப்பிச் சென்றது, தமிழகக் காவல்துறைக்குக் கிடைத்த கரும்புள்ளி. இந்தக் கொலையாளிகளைத் தேடிப் பிடித்திருந்தால், ராஜிவ் காந்தி படுகொலையை ஒருவேளை தடுத்திருக்கலாம். 38 வயதில் பரிதாபமாகக் கொல்லப்பட்டார் பத்மநாபா. ஆயுதமேந்தித்தான் பத்மநாபாவும் போராடினார் என்றாலும், அவரது கரங்களில் ரத்தக்கறை இருந்திருக்கவில்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் எந்தவொரு சாதாரண வழக்கிலும் கூட அவர் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. தாழ்த்தப்பட்டோர், மலையகத் தமிழர்கள், தமிழ் முஸ்லீம்கள் என அனைத்துத் தமிழ் மக்களின் ஆதரவும் பத்மநாபாவின் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்திற்கு அன்று இருந்தது. தொலைநோக்குச் சிந்தனையாளர். சர்வதேச அரசியல் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டவர். ‘தமிழ் மண்ணுக்காக மக்களை நேசிக்கவில்லை, மக்களுக்காகத்தான் மண்ணை நேசிக்கிறேன்’ என்றவரை இனத்துரோகி என்றார்கள். எழுத்தாளர் J. Ramki எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: J. Ramki Narrator: Pushpalatha Parthiban Publisher: Audiobook by Aurality / Itsdiff Entertainment ebook by Swasam

Title: Karuda Puranam Subtitle: கருட புராணம் Karuda Puranam: - An Aurality Tamil Audio Book Production - http://aurality.app மகா விஷ்ணு பேசுகிறார். 'அறிவிற்சிறந்த மகாத்மாக்களே! பூமியில் இருந்தபோது நரகத்திற்கு அஞ்சி, நற்செயல்களைப் புரிந்தீர்கள். அதனால்தான் மானுடரான நீங்கள் தேவர்களானீர்கள். கிடைத்தற்கரிய மானுடப் பிறவி எடுத்தும்கூட தேவர்கள் ஆவதற்கு முயற்சிக்காதவர்கள் நரகத்தில் விழுவார்கள். நீங்களோ நற்செயல் புரிந்து தேவர்களாகுவதற்கு முயற்சித்தீர்கள். பாவிகள், நிலையற்ற உடலை நிலையானது என்று பிரமையாக எண்ணி, பாவங்கள் செய்து, நரகத்தில் உழல்கின்றனர். நீங்களோ நிலைத்த சுகமான தேவநிலைக்காக நிலையற்ற உடலுக்கான சுகங்களைத் துறந்தீர்கள். காலையில் சமைத்தால் மாலையில் பாழாய்ப் போகும் அன்னத்தைப் புசிக்கும் மானுட உடல் மட்டும் பாழாய்ப் போகாமல் இருக்குமா என்ன? அதனால் உடலோடு இருக்கும்போதே கவனமாக நற்செயல் புரிந்து, தர்ம வழியில் நடந்து நரக வேதனையிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும். இறைவன் அளித்த புலன்கள், செல்வம், அறிவு அனைத்தையும் நற்செயல்களுக்காகப் பயன்படுத்தினீர்கள். அதனால் புண்ணியமான இந்த இடத்தை வந்தடைந்தீர்கள். நீங்கள் இன்னும் சிறந்த புண்ணிய லோகங்களுக்குச் செல்வீர்கள். வழியில் அனைவரும் உங்களை வழிபடுவார்கள்.' கருட புராணம் ஒரு கருவூலம். மகா விஷ்ணுவால் அருளப்பட்டது. இந்தப் பூமியில் பிறந்த மானுடர்கள் எப்படி நல்ல ஒழுக்கத்துடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்வது. நல்ல ஆத்மாக்கள் எப்படி எம லோகத்தில் ஆனந்தமாக இருக்கும் என்பதையும், கெட்ட ஆத்மாக்கள் எம லோகத்தில் எந்த எந்தக் கொடுமைகளுக்கு ஆளாகும் என்பதையும் விவரிக்கிறது கருட புராணம். இந்தப் புத்தகத்தில் சொல்லப்படாத கருத்துகளே இல்லை எனலாம். புல்லரிக்க வைக்கும் அழகுத் தமிழில் இந்த நூலை எழுதி இருக்கிறார் ராஜி ரகுநாதன். எழுத்தாளர் ராஜி ரகுநாதன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் Aurality tamil audio book வழங்கும் ஒலிவடிவம் கேட்போம். Author: Raji Raghunathan Narrator: Bhavani Anantharaman Publisher: Book by Swasam Audio book by : Aurality/ Itsdiff Entertainment

download free app - aurality today via play store and app store https://play.google.com/store/search?q=aurality&c=apps Title: Eliya Tamilil Pallavar Varalaaru Subtitle: எளிய தமிழில் பல்லவர் வரலாறு Series Name: Not Set Series Entry: Not Set Description: Eliya Tamilil Pallavar Varalaaru (Moolam: Rasamanikkanar): An Aurality Tamil Audiobook Production எளிய தமிழில் பல்லவர் வரலாறு (மூலம்: இராசமாணிக்கனார்) மா.இராசமாணிக்கனாரின் மூல நூல் இந்தத் தலைமுறையினருக்குப் புரியும் வகையில் இக்காலத் தமிழ்நடையில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. பல்லவர்களின் வரலாற்றை முழுவதுமாக அறிந்துகொள்ள இதுபோன்ற இன்னொரு நூல் இல்லை எனலாம். சோழர்களுக்கு முன்பாகத் தமிழ் நிலத்தின் பெரும்பரப்பை, ஏறத்தாழ 600 ஆண்டுகாலம் ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். சோழர்களின் காலத்தில் தமிழகக் கட்டடக் கலை உச்சம் தொட்டது என்றாலும், அதற்கான அடித்தளத்தை ஆழமாக இட்டவர்கள் பல்லவர்களே. தமிழ் நிலத்தில் முதன்முதலில் கருங்கற்கள் கொண்டு கோவில் எழுப்பிய பல்லவர்கள், செங்கற்களால் கட்டப்பட்ட கோவில்களைக் கருங்கற்களால் புதுப்பிக்கவும் செய்தார்கள். இதனைச் சான்றுகளுடன் விளக்குகிறார் நூலாசிரியர். பல்லவர் கால நீர் மேலாண்மை, காஞ்சி மாநகரின் அருமை, சைவ – வைணவ மதங்களின் எழுச்சி, சமண – பௌத்த மதங்களின் வீழ்ச்சி, பல்லவர்கள் மேற்கொண்ட போர்கள், அதன் விளைவுகள், அக்காலப் பஞ்சங்கள்; ஓவியம், சிற்பம், இசை மற்றும் நடனம் ஆகியவற்றிற்குப் பல்லவர்கள் கொடுத்த முக்கியத்துவம், அக்கால சமூகப் பொருளாதார நிலைகள், பல்லவர்களின் வீழ்ச்சி போன்றவை இந்தப் புத்தகத்தில் அழகாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் விவரிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் அச்யுதன் ஶ்ரீ தேவ் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Achyutan Shree Dev Narrator: Sukanya Karunakaran Book Publisher: Swasam Audio book by Aurality/ tamilaudiobooks.com Itsdiff Entertainment