
ஆஸ்திரேலியா, அதிகரிக்கும் உலக பாதுகாப்பு அபாயங்களை எதிர்கொள்ள அடுத்த 10 ஆண்டுகளில் கூடுதலாக 53 பில்லியன் டாலர்களால் பாதுகாப்பு செலவினத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு இராணுவ திறன், ட்ரோன் தொழில்நுட்பம், கடற்படை மற்றும் உள்ளூர் பாதுகாப்பு தொழில்துறையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. ஆனால், செலவின் தெளிவு மற்றும் இது போதுமானதா என்ற கேள்விகளுடன் சில விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.