
அதிகரித்து வரும் பெட்ரோல் விலை மற்றும் தொலை தூர இடங்களுக்குப் பயணிக்கும் போது அது போதியளவில் கிடைக்குமா என்பது குறித்த அச்சம் காரணமாக, வரவிருக்கும் ஈஸ்டர் விடுமுறையின் போது பலர் நீண்ட தூர கார் பயணத் திட்டங்களைக் கைவிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிலர் பயணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள். வேறு சிலர் பயணத்திட்டத்தைச் சுருக்குகிறார்கள். இன்னும் சிலர், மிகக் கவனமாகப் பயணிக்கிறார்கள். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
No transcript available.