
ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கி (Reserve Bank of Australia) RBA, (cash rate) வட்டி வீதத்தை மாற்றாமல், அதே 4.35 சதவீதத்தில் வைத்திருக்க ஒருமனதாக ஜூன் மாத கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச், மே ஆகிய மாதங்களில் தொடர்ந்து மூன்று முறை வட்டியை உயர்த்திய ரிசர்வ் வங்கி, இம்முறை அதில் மாற்றம் செய்வதில்லை என்று முடிவெடுத்திருக்கிறது. ஆனால் இது நிரந்தர நிறுத்தம் அல்ல என்றும், தாம் விரும்பும் இலக்கை விட பணவீக்கம் இன்னும் அதிகமாகவே இருப்பதால், தேவைப்பட்டால் ஆண்டு இறுதிக்குள் மீண்டும் வட்டியை உயர்த்தக்கூடும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் மிஷேல் புல்லக் (Michele Bullock) தெளிவுபடுத்தியுள்ளார். ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தும் சாத்தியம் இருக்கும்போது, சில வங்கிகள் ஏன் தங்கள் வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கின்றன என்ற கேள்வி எழுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார், குலசேகரம் சஞ்சயன்.
Loading summary