
நம் நாட்டின் சாலைகளில் மின்சார மிதிவண்டிகள் – e-Bikeகளின் பாவனை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் போர், எரிபொருள் விலை மீது நேரடித்தாக்கம் செலுத்துகிறது. அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு ஒரு வழியாக, மக்கள் வாகனங்களை ஓட்டுவதை விடுத்து மின்மிதிவண்டிகளைப் பயன்படுத்துகிறார்கள். அதிகரிக்கும் e-Bikeகள் சாலைப் பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன, இந்த மின்மிதிவண்டி ஓட்டுனர்கள் மட்டுமல்ல, வாகன ஓட்டுனர்களும் எவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று Supreme Car Learners என்ற அமைப்பை நிறுவி, பல வருடங்களாக வாகனங்களை சரியான முறையில் ஓட்டுவதற்குக் கற்றுக் கொடுத்துவரும் சிவகுருநாதன் சிறீக்குமார் அவர்களுடன் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Loading summary