
‘எண்ணிக்கை இல்லையேல் கையோங்கு' (Counting and Cracking) நாடகத்தின் புரட்சிகரமான சர்வதேச வெற்றியைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டில் முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட, ‘காடும் கடலும்' (The Jungle and the Sea) நாடகம், இலங்கை உள்நாட்டுப் போரின் சொல்லப்படாத வரலாறுகளுடன் இணைத்து, இழப்புகளிலிருந்து மீள்வது, அன்பைக் கண்டறிவது மற்றும் நீதிக்கான பாதையை உருவாக்குவது பற்றியது. நாடகத்தின் இயக்குனர் எஸ். சக்திதரனுடன் ஒரு நேர்காணல். ‘காடும் கடலும்' நாடகம் தற்போது சிட்னியில் அரங்கேறுகிறது, அதைத் தொடர்ந்து கன்பரா மற்றும் மெல்பன் நகரங்களிலும் அரங்கேற்றப்படுகிறது. இந்நாடகம் குறித்தும், அவர் அண்மையில் பெற்ற விருது குறித்தும் அவரது அடுத்த முயற்சி குறித்தும் எஸ். சக்திதரனுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். இந்த நேர்காணல் ஆங்கிலத்தில் இடம்பெறுகிறது.
Loading summary